இந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன?

இத்தொகுப்பில் உள்ள கதைகளை அதிகபட்சம் நாற்பது நாள் இடைவெளியில் எழுதினேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் செய்திகளில் பார்த்துப் பார்த்துக் கிட்டத்தட்ட மனச்சோர்வு எல்லைக்குச் சென்றுவிடுவேன் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அதில் இருந்து என்னைப் பிடுங்கிக்கொள்ளவே வழக்கத்தைவிட நிறைய எழுதத் தொடங்கினேன். ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – சென்னை நினைவுக் குறிப்புகளை அப்போதுதான் எழுதி முடித்திருந்தேன். இடைவெளி இன்றி இக்கதைகளை எழுதக் காரணமாக இருந்தவர் பெருந்தேவி. உயிர்மை … Continue reading இந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன?